மனம் அது செம்மையானால்..
உறவுகள் மேம்பட
குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில்
விரிசல்கள் ஏற்படாமல் இருக்ககவும், ஏற்பட்ட
விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க......அன்பு ... அன்பு ....
அன்பு ஒன்றே போதும்.....கடவுள் எங்கும் இல்லை....
நம்மிடையேதான் உள்ளார்...ஆம்
அன்புள்ளம் கொண்ட மனிதர்கள் தான் கடவுள்......
அன்பே சிவம்... அன்பே கடவுள்....
கீழ்கண்ட எண்ணத்தை விடுங்கள் அன்பு தானாகவே கடவுளாக நம்மை நாடி வரும்....
நானே பெரியவன். நானே சிறந்தவன் என் அகந்தையை விடுங்கள்..
அர்ததமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்ேடியருப்பதை விடுங்கள்,,,,,,
எந்த ஒரு விசயத்தையையும் பிரச்சனைளையும நாசுக்காக கையாளுங்கள்....
விட்டுக்ககொடுங்கள்....
சில நேரங்களில் சில சங்கடஙகளைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்....
எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ
சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள்...
உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்....
மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும்
தவறாதீர்கள்..
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை கூறவும் தவறாதீர்கள்..
பார்த்தும் பார்காதது போல் நடிக்காதீர்கள்...
பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கிவரவேண்டும் என்று நினைக்காமல்
நீங்களே முதலில் பேச்சைத் துவக்க முன் வாருங்கள்...
இந்த
இனிய
என்றும்
பயன் தரும்
வார்த்தைகள்
அன்பெனும் கடவுள்
நம்மிடையே வருவதற்கான
படிக்கட்டுகள்...
No comments:
Post a Comment